இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் விநியோகிப்பதில் இரத்தினபுரி மாவட்டத்தின் ஹுனுவல தோட்ட மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அத்தோட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரு ம் தெரிவிக்கின்றனர்.
இரத்தினபுரி மாவட்டத்தின் ஏனைய பல தோட்டங்களுக்கும் இந்த உதவி கிடைத்துள்ள போதிலும் இத்தோட் ட மக்களுக்கு மட்டும் இந்த உதவிக ள் இதுவரை கிடைக்காமை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இப்பிரதேச சமூக செயற்பாட்டாளர் சாமஸ்ரீ சமூக ஜோதி கே.தியாகேஸ்வரன் தெரிவித்தார்.
இதற்கு அதிகாரிகளால் தகவல்கள் வழங்குவதில் ஏற்பட்ட தாமதங்கள் அல்லது வேறு ஏதும் விடயங்கள் காரணங்களாக இருக்கலாம் என இம்மக்கள் மத்தியில் சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு இணைந்து வழங்கிய இந்த நிவாரண உதவி இம்மக்களுக்கு கிடைக்காமைக்கு அரச அதிகாரிகளின் அசமந்த போக்கு காரணமா அல்லது இன பாகுபாடா என்பது தொடர்பில் இத்தோட்ட மக்கள் சந்தேகங்களை வெளிப்படுத்துகின்றனர். இப்பிரதேச மக்கள் அனைவருக்கும் தாமதமின்றி இந்திய நிவா ரண பொருட்கள் கிடைப்பதற்கு வ ழி செய்யப்படல் வேண்டும் எனவும் இம்மக்கள் வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இரத்தினபுரியில் மேலும் ஒரிரு தோட்டங்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.