தமிழரசுக் கட்சியிடம் ஆதரவு கோருகிறார் ரணில்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமக்கு ஆதரவு வழங்குமாறுகோரி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி உட்பட முக்கிய பல கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடிதம் அனுப்பவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட பின்னர், ஜனாதிபதியால் மேற்படி கடிதம் கட்சிகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என தெரியவருகின்றது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிடமும் ஜனாதிபதி எழுத்துமூலம் ஆதரவு கோருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் இந்த கடிதம் கிடைத்த பின்னரே தமது கட்சியின் நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி திட்டமிட்டுள்ளது.

Related Articles

Latest Articles