தமிழருக்கு சர்வதேச நீதி வேண்டும்: ஜெனிவாவில் சிறீதரன் எடுத்துரைப்பு!

 

 

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள், தமிழினப் படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் – சர்வதேச நீதியை எதிர்பார்க்கும் தமிழ் சிவில் சமூகத்துக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

ஜெனிவாவில் நடைபெறும் 60 ஆவது கூட்டத் தொடரின் உபஅமர்வில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

 

‘ 2008 டிசம்பர் முதல் 2009 மே மாதம் வரை இலங்கை அரசு  தமிழர்களைக் கொன்றதன் மூலம் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்தது.

 

இந்த இனப்படுகொலைக்கு ஈழத் தமிழர்கள் சர்வதேச – பாரபட்சமற்ற – நீதியான விசாரணைகளைக் கோருகின்றனர். கடந்த 16 ஆண்டுகளாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றிடம் முறையிட்டு வருகின்றனர்.

 

ஈழத்தமிழர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதையும் நிலைமாறு கால நீதியை மேம்படுத்துவதையும் உறுதி செய்வதற்கான முயற்சிகளுக்கு ஆதரவாக தமிழ் சிவில் சமூகத்துக்கு முழு ஒத்துழைப்பையும் உதவியையும் வழங்க அனைத்து உறுப்பு நாடுகளையும் கேட்டுக்கொள்கிறேன்.” எனவும் சிறிதரன் எம்.ப. குறிப்பிட்டார்.

 

ஐ.நா. பொதுச் சபையின் 3ஆவது குழு உறுப்பினர்கள், இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைக்க வேண்டும். இலங்கை மீதான மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்கு நிதி உதவி அளிக்க வேண்டும்.

 

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை நடத்தினர். இதன் இறுதி நாளில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளுக்குச் சர்வதேச நீதி கோரப்பட்டது.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles