பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
பூரணை தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சிறிய குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 77 கைதிகளும் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
