தமிழ் மக்களின் மனங்களை நிச்சயம் வெல்வோம் – நாமல்

” போரில் இருந்து வடக்கை மீட்டுவிட்டோம். அடுத்ததாக இன ரீதியான அரசியல் பிடிக்குள் இருந்தும் வடக்கை மீட்டெடுக்கவேண்டும். வடக்கு மக்களின் மனங்களை வெல்வதற்கு எமக்கும் இன்னும் காலம் எடுக்கும். அதுவரையில் பொறுமைகாப்போம். ஆனால், நம்பிக்கையை பெறுவதற்கான போராட்டத்தை கைவிடமாட்டோம்.”

இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை மாவட்ட வேட்பாளரான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளாக நீங்கள் வடக்குக்கு சென்றுவருகின்றீர்கள். இளைஞர்களை சந்திக்கின்றார். அப்படி இருந்தும் ஏன் இன்னும் அங்கு வாழும் இளைஞர்களின் ஆதரவை பெறமுடியாதுள்ளது என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு.

“தெற்கு இளைஞர்களுக்கு இணையானவர்களே வடக்கு இளைஞர்களும். அவர்களிடம் நான் வித்தியாசத்தை காணவில்லை. தேசிய கட்சியொன்றுக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்பை முதலில் நாம் அவர்களுக்கு வழங்கவேண்டும். ஜனாதிபதித்தேர்தலின்போது மாத்திரமே அந்த வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

அதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகவே வாக்குகளை பெற முயற்சிக்கப்படுகின்றது. மைத்திரிபால சிறிசேனவும், சஜித் பிரேமதாசவும் அவ்வாறே வாக்குகளைப்பெற்றனர்.

எமக்கு 6 அல்லது 8 வீதம் கிடைத்தாலும் பரவாயில்லை, தனிவழியில் செல்லவேண்டும் என்ற முடிவில் இருக்கின்றோம். எனவே, தேசிய நீரோட்டத்துக்குள் சங்கமிப்பதற்கு அவர்களுக்கு அவகாசம் வழங்கவேண்டும். வாக்கு கிடைக்கவில்லை என்பதற்காக முயற்சியை கைவிடக்கூடாது.

உதாரணமாக ஜே.வி.பி இளைஞர்களை ஐக்கிய தேசியக்கட்சி கொன்றது. அவ்வாறு செய்த ஐக்கிய தேசியக்கட்சியும், ஜே.வி.பியும் இணைவதற்கு 30 ஆண்டுகள் எடுத்தன. இருதரப்புகளும் இணைந்துசெயற்படவில்லை எனக்கூறமுடியாது. கடந்தகாலங்களில் ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவாகவே ஜே.வி.பி. உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வாக்களித்துள்ளனர்.

2 ஜனாதிபதி தேர்தல்களில் ஐ.தே.க. பக்கம் நின்றனர். ஆனாலும் இதற்கு 30 ஆண்டுகள் எடுத்தன. எமது அரசியல் பயணத்துக்கு வடக்கு மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு 30 ஆண்டுகள் எடுக்கும் என நாம் கூறவில்லை. அதற்காக தொடர்ந்தும் முயற்சிக்கவேண்டும்.

குறிப்பாக டயஸ்போராக்கல் இன்னும் தனி நாட்டுக்காக குரல் எழும்பும் நிலையிலும்,, தெற்கிலுள்ள தேசிய கட்சி வடக்கில் அரசியல் செய்யாத நிலையிலும்கூட எமக்கு 10 வீத வாக்ககள் கிடைக்கின்றது. எனவே, வடக்கை கைவிடவேண்டாம் என தெற்கிலுள்ள கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

இற்றைக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கில் இனரீதியிலான அரசியல் இருக்கவில்லை. தேசிய அரசியலே அங்கு முன்னெடுக்கப்பட்டது. எனவே, தேசிய நீரோட்டத்தில் அவர்களை சங்கமிக்கவைப்பதற்கு வாய்ப்பு வழங்கவேண்டும். எனவே, வடக்கு அரசியலை கைவிடவேண்டாம் என கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles