தம்புள்ள வைகிங் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி!

லங்கா பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 10 ஆவது ஆட்டத்தில் தம்புள்ள வைகிங் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

கண்டி டஸ்கர்ஸ் , தம்புள்ள வைகிங் ஆகிய ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி அணி, முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தது.

இதன்படி களமிறங்கிய அவ்வணி 20 ஒவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களைக் குவித்தது. குசல் மெண்டிஸ் 55 ஓட்டங்களையும், குசல் ஜனித் பெரேரா 41 ஓட்டங்களையும் பெற்றனர்.

பின்னர் 197 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கண்டி அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

67 ஓட்டங்களைப்பெற்ற ஏ.கே. பெரோரா ஆட்ட நாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

Related Articles

Latest Articles