தலைமைப்பதவியில் மாற்றம் வருமா?

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப்பதவியில் மாற்றம் வரப்போவதல்லை. எனினும், கட்சிக்குள் மறுசீரமைப்பு இடம்பெற்று, வியூக மாற்றம் இடம்பெறும் என்று அக்கட்சியின் உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.

இரு ஜனாதிபதி தேர்தல்கள் உட்பட நான்கு தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்தி தோல்வியை சந்தித்துள்ளதால், தலைமைப்பதவியில் மாற்றம் வேண்டும் என்ற கருத்தை சிலர் முன்வைத்துவரும் நிலையிலேயே, துஷார இந்துனில் மேற்கண்டவாறு கூறினார்.

மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகிவருகின்றது. எந்த முறைமையில் தேர்தல் நடைபெறும் என்பது தொடர்பான தகவல் வெளியான பின்னரே பிரச்சார வியூகம் வகுக்கப்படும். மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles