திகாவால் விரட்டப்பட்டவர்கள் ஐ.தே.கவில் அரசியல் தஞ்சம்?

தொழிலாளர் தேசிய முன்னணியிலிருந்து வெளியேறியுள்ள அதேபோல் வெளியேற்றப்பட்ட உறுப்பினர்கள் சிலர் விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சங்கமிக்கவுள்ளனர் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

உள்ளாட்சி சபைகளில் தமது பதவிகளை தக்கவைத்துக்கொள்வதற்காகவும், புதியதொரு கட்சி மலரும்வரை தமது அரசியல் இருப்பை பாதுகாத்துக்கொள்வதற்காகவுமே இவர்கள் ஐ.தே.க. பக்கம் செல்கின்றனர் என பெயர் குறிப்பிட விரும்பாத உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய முன்னணியில் இருந்து முன்னாள் எம்.பியொருவர் நீக்கப்பட்டதையடுத்து அவருக்கு சார்பானவர்கள் வெளியேறிவருவதுடன், சிலர் வெளியேற்றப்பட்டும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles