அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோரின் கட்சிகள் ஆதரவளிக்கவுள்ளன என்று சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்டத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சியிலுள்ள ஏதேனும்மொரு தரப்பு 20 இற்கு ஆதரவு வழங்க மறுக்கும்பட்சத்தில் மேற்படி தரப்புகளின் ஒத்துழைப்பை பெறும் நோக்கிலேயே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியன கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின்கீழ் போட்டியிட்டன் என்பது குறிப்பிடத்தக்கது.