திண்டாடிய அரச அதிகாரிகளுக்கு வழிகாட்டிய செந்தில் தொண்டமான்

பதுளை, வெலிமடை வோர்விக் தோட்ட மார்ட்டின் பிரிவு லயன் குடியிருப்பொன்றில் இன்று (17) ஏற்பட்ட தீ விபத்தால் 14 வீடுகள் தீக்கிரையாகின.

இவ்வனர்த்தம் குறித்து அறிவிக்கப்பட்ட கையோடு, பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்க உடனடி நடவடிக்கை எடுத்தார்.

அத்துடன், அவர்கள் தங்குவதற்காக தற்காலிக இருப்பிடமொன்றை அமைக்குமாறு தோட்ட நிர்வாகத்துக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

அத்துடன், மாவட்ட அரசாங்க அதிபருடன் பேச்சுவார்த்தை நடாத்தி, வெலிமடை கிராம சேவகர் ஊடாக அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்துகொடுக்குமாறும் உலர் உணவுப் பொருட்களும் வழங்குமாறும் செந்தில் தொண்டமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேவேளை, பாதிக்கப்பட்ட லயன் குடியிருப்பை மீள கட்டமைப்பு செய்வதற்கு மாகாண சபை ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்தலின் பின்னர் செந்தில் தொண்டமான் இன்னும் தனது பணிகளை ஆரம்பிக்கவில்லை. அப்படி இருந்தும் மக்களுக்கு அனர்த்தம் ஏற்பட்டுவிட்டது என தெரிந்தவந்தவுடன் களத்துக்கு சென்று தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

குறிப்பாக என்ன தெய்வதென தெரியாமல் திண்டாடிய அரச அதிகாரிகளுக்கு இது விடயத்தில் எவ்வாறு செயற்படவேண்டும் எனவும் செந்தில் தொண்டமான் வழிகாட்டினார்.

Related Articles

Latest Articles