திபெத்தில் உள்ள உறைவிட பாடசாலைகள் சீன கலாச்சாரத்தில் முழுமையாக மூழ்கி காணப்படுகின்றன

வெளிநாட்டு ஊடகமொன்றாக திபெத்தில் நுழைவதற்கான ஒரே வழியாக சீன அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வழங்கப்பட்ட அனுமதியின்படி, ஸ்பெயின் சர்வதேச செய்தி நிறுவனமான EFE திபெத் பாடசாலைக்கான அணுகலைப் பெற்றது. இங்கு மாணவர்கள் மாண்டரின் மற்றும் திபெத்தியம் இரண்டையும் கற்றுக்கொள்கிறார்கள், இருப்பினும் இந்த சிறுபான்மை குழு சீன கலாச்சாரத்தில் முழுமையாக மூழ்கிவிட்டதாகத் தெரிகிறது என்று laprensalatina.com ஜூலை 28 அன்று அறிக்கை செய்தது.

திபெத்தியர்களுக்கு எதிராக வலுக்கட்டாய கொள்கைகள் பற்றிய குற்றச்சாட்டுகள் குறித்து பெய்ஜிங் எதிர்கொண்டுள்ள விமர்சனங்களை சரி செய்வதே, இந்த விஜயத்தை ஏற்பாடு செய்ததில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நோக்கமாக இருந்தது. மறுபுறம், பிராந்தியத்தின் “வளர்ச்சியை மேம்படுத்துவதை” நோக்கமாகக் கொண்டதாக பெய்ஜிங் கூறுகிறது.

சில உள்ளூர்வாசிகள், EFE உடன் பெயர் குறிப்பிடாமல் பேசுகையில், மாண்டரின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தால் தாங்கள் திகைத்துப் போனதாகக் கூறினர். ஆனால் அதுதான் முன்னோக்கி செல்லும் ஒரே வழி என்று அதிகாரிகள் வாதிடுகின்றனர்.

“எங்கள் பாடசாலையில் 30 முழுநேர திபெத்திய மொழி ஆசிரியர்கள் உள்ளனர். திபெத்திய வகுப்புகளின் நேரம் மாண்டரின் போன்றே, வாரத்திற்கு ஐந்து முதல் ஏழு” என்று லாசாவிலிருந்து தென்கிழக்கே 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷானனில் உள்ள மேல்நிலைப் பள்ளியின் துணைத் தலைவர் வாங் சுயின்’கா கூறினார்.

மாணவர்களின் வயதைப் பொறுத்து பாடத்திட்டம் மாறுபடும் என்றும் அவர் கூறினார். “உயர்நிலைப் பள்ளியின் முதல் ஆண்டில் அதிக திபெத்திய பாடங்கள் உள்ளன…. அடுத்த ஆண்டுகளில், குறைவாக உள்ளது.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விஜயம் ஒரு ஞாயிற்றுக்கிழமை, ஓய்வு நாளன்று நடந்தது, ஆனால் திபெத்தில் கல்வி “இணக்கமாகவும் இயல்பாகவும்” நடைபெறுகிறது என்ற சீன அரசாங்கத்தின் முழக்கத்தை எதிரொலிக்க அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்கப்பட்டுள்ளனர் என்று குறித்த அறிக்கை கூறுகிறது.

உறைவிடப் பள்ளிகளாக உள்ள கல்வி மையங்களில், புதிய தலைமுறைகள் தங்கள் பாரம்பரியத்துடன் தொடர்பை இழக்கும் அபாயம் உள்ளது என அரச சார்பற்ற நிறுவனங்களையும் ஐக்கிய நாடுகள் சபையையும் மேற்கோள் காட்டி அறிக்கை கூறியது.

திபெத்திய குழந்தைகள் பெற்றோர்கள் மற்றும் தாத்தா பாட்டிகளுடன் தொடர்பு கொள்ளும் திறனை இழக்க நேரிடும் என்று ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர், “பாரம்பரிய அல்லது கலாச்சார ரீதியாக பொருத்தமான கற்றலுக்கான அணுகல் இல்லாமல் சீன மாண்டரின் மொழி (புடோங்குவா) பாடத்திட்டமானது, தவிர்க்க முடியாமல் அவர்களின் அடையாள அரிப்புக்கு பங்களிக்கும்.” என ஐநா அறிக்கை எச்சரித்ததாக கூறப்பட்டது.

laprensalatina.com அறிக்கை, “புடோங்குவா மொழி அரசுப் பள்ளிகள் திபெத்திய சிறுபான்மையினரின் மொழி, வரலாறு மற்றும் கலாச்சாரம் பற்றிய கணிசமான ஆய்வை வழங்கவில்லை” என்று ஐ.நா நிபுணர்கள் கூறியதாக மேற்கோளிட்டுள்ளது.

Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05
Video thumbnail
மலையகம் நேற்று இன்று நாளை I Shortfilm
06:51

Related Articles

Latest Articles