“திரு​மணம் பற்றி விளக்​கம் சொல்ல விரும்​ப​வில்லை” – ஈஷா ரெப்பா கறார்

தமிழில், ‘ஓய்’, அசோக் செல்​வனின் ‘நித்​தம் ஒரு வானம்’ ஆகிய படங்​களில் நடித்​திருப்​பவர், தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா. இவர் இப்​போது ‘ஓம் சாந்தி சாந்தி சாந்​தி’ என்ற தெலுங்கு படத்​தில் நடித்​துள்​ளார்.

இதை இயக்கி நாயக​னாக தருண் பாஸ்​கர் நடித்திருக்கிறார். மலை​யாளத்​தில் வெற்றி பெற்ற ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ என்ற படத்​தின் ரீமேக்​கான இப்படம் நாளை வெளி​யாகிறது. இப்​படத்​தின் ஹீரோ தருண் பாஸ்​கரை, ஈஷா ரெப்பா காதலித்து வரு​வ​தாக​வும் இரு​வரும் விரை​வில் திரு​மணம் செய்​து​கொள்ள இருப்​ப​தாக​வும் செய்​தி​கள் வெளி​யாகி இருந்​தன.

இதுபற்றி ஈஷா ரெப்​பா​விடம் கேட்​ட​போது, “உங்​கள் கட்டுப்​பாட்​டில் இல்​லாததை உங்​களால் திட்​ட​மிட்​டுச் சொல்ல முடி​யாது. சரி​யான நேரத்​தில் சரி​யான விஷயங்கள் நடக்​கும் என்று நம்​பு​கிறேன். இதற்கு எந்த விளக்​க​மும் கொடுக்க விரும்பவில்​லை. என் வாழ்க்கையில் குறிப்​பிடத்​தக்க நிகழ்​வு​கள் ஏதும் நடந்தால், அதை நானே அறி​விப் பேன்” என்​றார்.

தருண் பாஸ்​கர் கூறும்​போது, “திரு​மணம் பற்றி அறிவிப்பதற்​கு சரி​யான நேரத்​துக்​காகக் காத்திருக்கிறேன். ஈஷா ரெப்​பா, ஒரு தோழியை விட அதிக​மாக, ஒரு துணை​யாக, எனக்கு எல்​லா​மு​மாக இருக்கிறார். அதில் மறைப்​ப​தற்கு ஒன்​றுமில்​லை. இது தனிப்​பட்ட விஷ​யம் என்​ப​தால், எனது அறி​விப்பு மற்​றவர்​களைப் பாதிக்​கலாம். எல்​லாம் சரி​யாக நடந்​தால், கடவுள் விரும்​பி​னால், விரை​வில் அறி​விப்​போம்” என்​றார்.

Related Articles

Latest Articles