திலகரின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு!

மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் இலங்கை மலையகத் தமிழ் மக்களின் ஜனாதிபதி வேட்பாளருமான மயில்வாகனம் திலகராஜா வின் தேர்தல் கொள்கைப் பிரகடனம் செப் 7 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு நுவரெலியா மாவட்டம், வட்டகொட, மடகொம்பரை, புதுக்காடு தோட்டத்தின் ஐந்தாம் இலக்க லயன் அறையில் வெளியிடப்பட உள்ளதாக அரங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுரேஷ்குமார் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

அர்த்தமுள்ள பிரஜைகள் எனும் தலைப்பில் தேசிய, மலையக விடயப்பரப்புகளை உள்ளடக்கியதான இரண்டு பாகங்களைக் கொண்ட இந்தக் கொள்கை அறிக்கை மூன்று மொழிகளிலும் உள்ளடக்கங்ளைக் கொண்டுள்ளது. மலையக மண்ணில் இடம் பெறும் வெளியீட்டை அடுத்து 9 ஆம் திகதி கொழும்பு சர்வதேச் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறும் பகிரங்க விவாத மேடையிலும்.10 ஆம் திகதி அரசாங்க ஊடகத் தகவல் நிலையத்தில் இருந்து நேரலையாக நாட்டு மக்களுக்கும் வேட்பாளரினால் முன்வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles