திலிப் வெதஆராச்சி எம்.பியின் மகன் – மருமகளுக்கு பிணை

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சியின் மகன் மற்றும் மருமகள் ஆகியோருக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1ஆம் திகதி குறித்த இருவரும் பாதுகாப்பற்ற முறையில் கெப்ரக வாகனத்தின் பின்பகுதியில் குளிர்சாதனபெட்டியை ஏற்றி தெற்கு அதிவேக வீதியில் பயணிப்பதற்கு முயற்சித்தனர்.

இதனை அவதானித்த போக்குவரத்து பொலிஸார் அவர்களை தடுத்துள்ள நிலையில், பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தி சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (8) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, அவர்களுக்கு இவ்வாறு பிணை வழங்குவதாக வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Articles

Latest Articles