திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம்!

யாழ். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இன்று பெரும் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“தையிட்டி எங்கள் சொத்து – எங்கள் காணிகளை அபகரிக்காதே” முதலான கோஷங்களை எழுப்பிய மாணவர்கள், விகாரையை உடனடியாக அகற்றுமாறும் கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன் தையிட்டியில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாகச் செயற்பட்டமைக்கும், அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யப்பட்டமைக்கும் மாணவர்கள் கடும் கண்டனமும் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles