கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம்மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
மேற்படி சட்டமூலம்மீதான விவாதம் நேற்று ஆரம்பமான நிலையில் இன்றைய தினமும் தொடர்கின்றது. மாலையில் குழுநிலை விவாதத்தின்போது உயர்நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் உள்வாங்கப்படும்.
அதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகளும் பல திருத்தங்களை முன்வைத்துள்ளன. அவற்றை அரசு ஏற்க மறுக்கும்பட்சத்தில் சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்க அக்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இதன்படி ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் முற்போக்கு கூட்டணியின் 5 எம்.பிக்கள் சட்டமூலத்தை எதிர்க்கவுள்ளனர். இ.தொ.காவினர் ஆதரிக்கவுள்ளனர்.










