தூங்க மறுத்த மகன் – பொலிஸாரிடம் முறையிட்ட தாய்! தம்புள்ளையில் சினிமா பாணியில் சம்பவம்!

தரம் மூன்றில் கல்வி பயிலும் தனது மகன் இரவு 7 மணிக்கு நித்திரைக்கு செல்லாத காரணத்தால் அச் சிறுவனின் தாயார், 119 என்ற பொலிஸ் அவசர பிரிவிற்கு அழைப்பையெடுத்து முறைப்பாடு செய்த சம்பவமொன்று தம்புள்ளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தம்புள்ள பொலிஸாருக்கு இரவு நேரம் அவசர தொலைபேசி அழைப்பு ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி தமது பிள்ளை குழப்பம் செய்வதாகவும் குடும்ப அங்கத்தவர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இரு பொலிஸார் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு சென்றுள்ளனர். சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் பயணித்து வீட்டைத் தேடிப்பிடித்துள்ளனர். வீடு மூடப்பட்டு அமைதியாகக் காணப்பட்டுள்ளது.

பொலிஸார் அவர்களை எழுப்பி, 119 தலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டை விசாரிக்க வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அப்போது முறைப்பாட்டை வழங்கிய பெண்,

” இப்போது காலம் கடந்து விட்டதே, நான் 7 மணிக்கு அல்லவா தொலைபேசி எடுத்தேன். தற்போது இரவு 9 மணி ஆகிவிட்டதே என்று கூறியுள்ளார். விடயம் புரியாத பொலிஸார் மேலதிக தகவல்களை கேட்டுள்ளனர்.

அதன் போதுதான் பின்வரும் விடயம் தெரிய வந்துள்ளது.

இரவு 7 மணிக்கு முன்பே பிள்ளைகளுக்கு உணவளித்து நித்திரைக்கு அனுப்புவதாகவும் ஆனால் 3ம் தரத்தில் கல்வி பயிலும் குறிப்பிட்ட ஒரு மகன் மட்டும் நித்திரை செய்யாது மற்றயவர்களுக்க இடையூறு செய்வதாகவும், எனவே அவரைப் பயமுறுத்தி நித்திரை செய்ய வைக்கவே பொலிஸாருக்க தகவல் தெரிவித்தாவும் கூறியுள்ளார்.

இதனைக் கேட் பொலிஸார் கடுப்பாகினர் . இப்படியான சிறிய விடயங்களுக்கு எங்களை அழைக்கக் கூடாது என்றும், இதனால் மக்கள் பணம் வீண்விரயமாகின்றது எனவும், தமது கடமைகளை செய்வதில் தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவித்து கடும் எச்சரிக்கை செய்து, மீண்டும் பொலிஸ் நிலையம் திரும்பியுள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles