ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை ஏற்கப்போவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இருப்பதால் நீதிமன்றம் ஊடாக தனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் கூறினார்.
பொதுச்செயலாளர் பதவியில் இருந்தே என்னை நீக்கியுள்ளனர்.
முதலில் அப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். கட்சியின் தலைமைப் பதவி வழங்கப்படுமானால் அதனை ஏற்பேன் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.
