இந்த ஆண்டின் “தேசிய பாதுகாப்பு தின” நிகழ்வு சுனாமி பேரழிவினால் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதுடன், அண்மையில் நாட்டில் ஏற்பட்ட ‘தித்வா’ புயலினால் உயிரிழந்தவர்களையும் நினைவு கூறும் வகையில் நாட்டில் அனைத்து, மாவட்டங்களிலும் மாவட்ட செயலகத்தினை மையமாகக் கொண்டு சர்வமத பிரார்த்தனை நிகழ்வுகளை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், 2025 டிசம்பர் 26 அன்று “தேசிய பாதுகாப்பு தினத்தின்” பிரதான நினைவேந்தல் நிகழ்வு, காலி, பேரலிய சுனாமி நினைவுச் தூபிக்கு முன்பதாக காலை 8.30 முதல் 11.00 மணி வரை நடைபெறவுள்ளது.
அத்துடன், 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரழிவில் மற்றும் குறிப்பாக தித்வா இயற்கை சீற்றத்தால் உயிரிழந்தவர்கள் நினைவாக, 2025 டிசம்பர் 26 காலை 9.25 முதல் 9.27 வரை, நாடு முழுவதும் இரு நிமிட நிசப்தத்தை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.










