தேர்தலை நடத்த இடைக்காலத் தடை”

களுத்துறை பிரதேச சபைக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு எதிராக உயர் நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நவ லங்கா சுதந்திரக் கட்சியால் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனு தொடர்பில் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் வரை இந்தத் தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலிக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Related Articles

Latest Articles