அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை வர்த்தமானியில் வெளியிடுவதை தவிர்க்குமாறு நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச நீதி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் நிலவும் நிச்சயமற்ற தன்மையை போக்கும் நோக்கில் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
