தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம்

தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம் செய்துள்ளனர்.

மாளிகையில் இருந்த தொல்பொருள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் சேதமாக்கப்பட்டதா அல்லது கொள்ளையடிக்கப்பட்டதா என்பதை மதிப்பீடு செய்ய அவர்கள் அங்கு சென்றுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி மாளிகை மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், எவ்வாறான சேதம் ஏற்பட்டது என்பது குறித்து மதிப்பீடு செய்யவுள்ளனர்

Related Articles

Latest Articles