‘தொழிற்சங்க ரீதியில் அனைவரும் ஒன்றிணைவோம்’ – ஜீவன் அழைப்பு!

” தொழிலாளர்களைக் கட்டுப்படுத்துவதற்கு அல்ல, பெருந்தோட்டக் கம்பனிகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே கூட்டு ஒப்பந்தம் அமுலில் உள்ளது.  நாம் பிரிந்துநின்றால் அது கம்பனிகளுக்கே நன்மையாக அமைந்துவிடும். எனவே, தொழிலாளர்களின் நலன்களுக்காக தொழிற்சங்க ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலை – நுவரெலியா பிரதான வீதியை இணைக்கும் தோட்டப்பாதைகளில் ஒன்றான கொட்டகலை கிறிலஸ்பாம், கே.ஜி.கே ஆகிய தோட்டங்களுக்கு செல்லும் பிரதான பாதையை புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இன்று (22.11.2020) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு கூறினார்.இது தொடர்பில் ஜீவன் தொண்டமான் மேலும் கூறியதாவது,

” பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள பாதைகள் புனரமைக்கப்படும் என தேர்தலின்போது நாம் உறுதியளித்தோம். அந்த உறுதிமொழி தற்போது நிறைவேற்றப்பட்டுவருகின்றது. இதற்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ முழு ஒத்துழைப்பையும் வழங்கிவருகின்றார்.

விமர்சனங்களை மாத்திரம் முன்வைத்து, ஊடகங்களின் முன்னிலையில் வீராப்புபேசும் அரசியல் கலாச்சாரத்தை நான் பின்பற்றவில்லை. ஒரு அரசியல்வாதியாக அல்லாமல், மக்களுக்கு சேவையாற்றும் சிறந்த நிர்வாகியாக இருக்கவே நான் விரும்புகின்றேன். எனவே, என்னை வேலை செய்ய விடுங்கள், மக்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும்.

பெருந்தோட்ட மக்களுக்கு வரவு – செலவுத்திட்டத்தில் எந்தவொரு ஒதுக்கீடும் இல்லை என முன்னாள் அமைச்சர் ஒருவர் குற்றஞ்சாட்டுகின்றார். பெருந்தோட்ட மக்கள் என்பவர்களும் இலங்கையர்களே, அவர்கள் தனித்துவிடப்பட்டவர்கள் அல்ல. எனவே, ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கே வரவு – செலவுத்திட்டத்தில் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆயிரம் ரூபா சம்பளம், மலையக பல்கலைக்கழகம், நுவரெலியா மாவட்டத்தில் மும்மொழி தேசிய பாடசாலை போன்ற நல்ல திட்டங்கள் பட்ஜட்டில் இருந்தும் எதிரணியிலுள்ள மலையக அரசியல்வாதிகள்இ அதனை ஆதரித்து வாக்களிக்கவில்லை. இதன்மூலம் மக்களைவிடவும் அவர்களுக்கு அரசியலே முக்கியம் என்பது உறுதியாகின்றது.

அதேவேளை, கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான கருத்துகள் பரப்பட்டுவருகின்றன. உண்மையில் கூட்டு ஒப்பந்தமானது தொழிலாளர்களைக் கட்டுப்படுத்துவதற்கு அல்ல. மாறாக கம்பனிகளைக்கட்டுப்படுத்துவதற்காகவே அது அமுலில் உள்ளது.

ஆயிரம் ரூபாவுக்கான யோசனை வந்துள்ள நிலையில் தற்போது அடிப்படை சம்பளமாக ஆயிரம் வேண்டும் என கூறுகின்றனர். ஆனால் உண்மை எது என்பது மக்களுக்கு தெரியும். கட்சி ரீதியாக மக்கள் பிரிந்திருக்கலாம். சிலர் நடுநிலையாக இருக்கலாம். ஆனால் தொழிற்சங்க ரீதியில் நாம் ஒற்றுமையாக இருக்கவேண்டும். அப்போதுதான் கம்பனிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கலாம். நாம் பிரிந்துநின்றால் அது கம்பனிகளுக்கே நன்மையாக அமைந்துவிடும்.  ” – என்றார்.

க.கிசாந்தன்

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles