தோட்டத் தொழிலாளரின் முயற்சியில் முதலாவது கூட்டுறவு வர்த்தக நிலையம் : மஸ்கெலியாவில் முன்னுதாரணம்

– மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்

மஸ்கெலியா நகரில் தோட்டத் தொழிலாளர்களினால் முதலாவது கூட்டுறவு வர்த்தக நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தக நிலையத்தை புதியதாக பதவியேற்ற கண்டி இந்திய உதவி தூதரக பதவியேற்றுள்ள ராகேஸ் நடராஜ் நேற்று (17) திறந்து வைத்தார்.

ஈ 4 டி நிறுவனத்தினால் (ஈபோடி) வழிகாட்டலில் லக்கம் தோட்ட மக்களினால் கடந்த காலங்களில் சேமிப்புக்குழுக்களை உருவாக்கி அதன் மூலம் சேமிக்கப்பட்ட 3.2 மில்லியன் ரூபா பணத்தினை கொண்டு இந்த கூட்டுறவு வர்த்தக நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்தின் மூலம் பெறும் வருமானத்தில் பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதும்,தோட்ட மக்களால் உற்பத்தி செய்யப்படுகின்ற உணவு பொருட்களுக்கு நியாயமான விலைக்கு பெற்றுக்கொடுப்பதற்குமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், பொருளாதாரத்தை உயர்த்துவதும், அதே நேரம், வருகின்ற லாபத்தில் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை விருத்தி செய்வதே இதன் நோக்கமாகும்.

ஈபோடி நிறுவனம் கூட்டுறவு துறையில் அனுபவமிக்கவர்களை கொண்டு இந்தப் பயிற்சிகளும், தெளிவூட்டல்களும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் தோட்டத்தில் வாழ்கின்ற பல குடும்பங்களில் பொருளாதார நிலைமைகள் மேம்படவுள்ளதுடன் பலருக்கு தொழில் வாய்ப்புக்களும் கிடைக்கவுள்ளன.

ஈபோடி (E4D) நிறுவனத்தின் முகாமையாளர் கே.விக்னேஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு மஸ்கெலியா பிரதேசசபையின் தவிசாளர் செம்பகவள்ளி,ஹட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Related Articles

Latest Articles