மலையக பெருந்தோட்ட மக்களுக்கு மானிய விலையின் அடிப்படையில் கோதுமை மாவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று தெரிவித்தார்.
இதன்படி 15 கிலோ கோதுமை மா 80 ரூபாபடி வழங்கப்படும். இதன்மூலம் அவர்களுக்கு கிலோவுக்கு 40 ரூபா நிவாரணம் வழங்கப்படுகின்றது.
ஊழியர் சேமலாப நிதியத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும் எனவும் நிதி அமைச்சர் தெரிவித்தார்.
…..
அனைத்து அரச ஊழியர்களுக்கும் மாதாந்தம் 5,000 ரூபா விசேட கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
….
அனைத்து அரச ஊழியர்களுக்கும் மாதாந்தம் 5,000 ரூபா விசேட கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
