” பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையக மக்களின் அதிக ஆதரவைப்பெற்ற கட்சி தமிழ் முற்போக்கு கூட்டணியாகும். எமக்கே மக்கள் அதிகளவு வாக்களித்துள்ளனர். எனவே, எமது அனுமதியின்றி எவரும் தோட்டத் தொழிலாளர்களின் தலைவிதியை தீர்மானிக்க முடியாது என்பதனை உரிமையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
கூட்டு ஒப்பந்த பேச்சு மற்றும் சம்பள நிர்ணய சபை ஊடான கலந்துரையாடல் தோல்வியில் முடியும் பட்சத்தில், கம்பனிகள் மற்றும் அரசு சம்பள உயர்வை வழங்க மறுக்கும்பட்சத்தில் முற்போக்கு சக்திகளை அணிதிரட்டி நாடு தழுவிய ரீதியில் கடையடைப்பு போராட்டத்தை நடத்துவதற்கு நாம் தயார். 9 மாகாணங்களிலும் கடையடைப்பு போராட்டம் செய்வோம்.”
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட எம்.பியுமான மனோ கணேசன் தெரிவித்தார்.
சம்பள உயர்வு விவகாரம் தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது மனோ கணேசன் வெளியிட்ட கருத்துகள் வருமாறு,
