சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதென அறியமுடிகின்றது.
குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை செப்டம்பர் முதல் வாரத்தில் வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்கனவே தீர்மானித்துள்ளது.










