நம்பிக்கையில்லாப் பிரேரணை வருமா? 20,21 இல் விவாதம் நடத்த அரசாங்கம் தயார்!

“பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.”

இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், ஆளுங்கட்சி பிரதம கொறடாவுமான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

“பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிரணி விரைவில் முன்வைக்கும் என நம்புகின்றோம்.

அது தொடர்பில் இரு நாட்கள் விவாதிப்பதற்கு நாம் தயார். தேவையேற்படின் மேலும் மூன்று நாட்கள் வழங்கலாம்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டால் கல்வி மறுசீரமைப்பு தொடர்பிலும் உண்மையான பக்கம் தெரியவரும்.

விவாதத்துக்கும், விமர்சனங்களுக்கும் உரிய விளக்கங்களை வழங்கவும் நாம் தயார். முதலில் எதிரணி தயாராகட்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles