நாடாளுமன்றத்தை கொளுத்த முற்பட்டவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை அவசியம்!

அரகலயவின்போது நாடாளுமன்றத்தைக் கொளுத்துவதற்கு வந்தவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் வலியுறுத்தினார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு,

“நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவை கொலை செய்த நபர்களுக்கு தண்டனை கிடைக்கப்பெற்றமை மகிழ்ச்சியளிக்கின்றது. ஏனெனில் காட்டாட்சிக்கு இடமளிக்க கூடாது. நாட்டில் சட்டம் அமுலாக வேண்டும்.

நாடாளுமன்றத்தைக் கொளுத்துவதற்கும் நபர்கள் வந்தனர். சிலர் தற்போது அமைச்சர்களாக உள்ளனர். அவர்களுக்கு எதிராகவும் சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். ஆனால் இந்த ஆட்சியின்கீழ் அது நடக்குமா என்பது சந்தேகமே;.” – என்றார் எஸ்.எம். மரிக்கார்.

Related Articles

Latest Articles