நாடாளுமன்றம் இன்று கூடுகிறது – அனைத்து எம்.பிக்களுக்கும் கொரோனா பரிசோதனை

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகள் நிறைவுபெற்ற பின்னர், அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதம் ஆரம்பமாகும். பிற்பகல் 4.30 மணிவரை விவாதம் தொடரும் என சபாநாயகர் அலுவலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் கடந்த 30ஆம் திகதி அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரகடனத்தை இன்று விவாதத்துக்கு உட்படுத்துவதற்கு கடந்த 02 ஆம் திகதி நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

இதனால் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெறவிருந்த வாய்மூல விடைக்கான கேள்விகளை மற்றுமொரு தினத்துக்கு ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் நாடாளுமன்ற வளாகத்தில் விசேட கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்படவுள்ளது.

கொரோனா நிலைமையால் இன்றும், நாளையும் மட்டுமே சபை கூடுகின்றது.

Related Articles

Latest Articles