ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவே அமெரிக்காவுக்கு பறந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரான பஸில் ராஜபக்ச, எதிர்வரும் ஜுன் மாதம் இலங்கை வரவுள்ளார் என தெரியவருகின்றது.
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தமது கட்சியின் வாக்கு வங்கி அதிகரிக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமன கட்சி கருதுகின்றது.
அதேபோல அடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து கட்சியை வெற்றிகரமாக வழிநடத்துவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைத்தல், அவர்களை மீண்டும் கட்சி இயந்திரத்தில் இணைத்தல் மற்றும் கட்சியை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் உள்வாங்குதல் போன்ற பணிகளை முன்னெடுப்பதற்கு பஸில் ராஜபக்ச கொழும்பு வருகின்றார் எனக் கூறப்படுகின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த முன்னாள் எம்.பிக்கள், தற்போது மீண்டும் மொட்டு கட்சி பக்கம் படையெடுத்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாகாணசபைத் தேர்தலுக்குரிய பிரச்சார வியூகமும் பஸில் தலைமையிலேயே வகுக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.










