‘நாடு முடங்குமா’?

கிறிஸ்மஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு காலத்தில் நாட்டை முடக்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இன்று இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

எனினும், கொரோனா தொற்று பரவுவதைத் தடுப்பதற்கு தேவையான சுகாதார நடைமுறைகளை மக்கள் முழுமையான பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

கொரோனா தொற்றின் ஒமிக்ரோன் மாறுபாடு உறுதியான 4 பேர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Related Articles

Latest Articles