நாட்டில் நேற்று 7 ஆயிரத்து 870 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன், இதுவரையில் 4 லட்சத்து 77 ஆயிரத்து 156 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 70 தனிமைப்படுத்தல் மையங்களில் 7 ஆயிரத்து 39 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரையில் 58 ஆயிரத்து 697 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்துகொண்டு வெளியேறியுள்ளனர்.
அதேவேளை, மினுவங்கொட கொரோனா கொத்தணி மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5ஆயிரத்து 731 ஆக அதிகரித்துள்ளது
