நாட்டில் மேலும் 338 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இன்று மாத்திரம் 650 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 387 ஆக அதிகரித்துள்ளது.
2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 31 ஆயிரத்து 720 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.