கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் மேலும் இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
மாத்தளை மாவட்டத்தின் உக்குவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லேக்கும்புர கிராம சேவகர் பிரிவு மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தின் ஹிங்குரக்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறிக்கெத்த கிராம சேவகர் பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
