நாட்டில் மேலும் 359 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பேலியகொடை கொத்தணிமூலம் 316 பேருக்கும் சிறைச்சாலை கொத்தணிமூலம் 43 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 737 ஆக அதிகரித்துள்ளது.
2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 26 ஆயிரத்து 186 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.










