நாட்டில் மேலும் 49 பேருக்கு கொரோனா

மினுவாங்கொட கொரோனா கொத்தணி பரவல்மூலம் இலங்கையில் மேலும் 49 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 13 பேருக்கும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 36 பேருக்குமே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மினுவாங்கொட கொரோனா கொத்தணி பரவலின் எண்ணிக்கை ஆயிரத்து 770 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles