நாட்டில் மேலும் 980 பேருக்கு கொரோனா – 31 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 31 பேர் நேற்று (16) உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 17 ஆண்களும், 14 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி வைரஸ் தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 733 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, நாட்டில் மேலும் 980 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles