நாட்டில் மேலும் 378 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாத்திரம் 687 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 229 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 43 ஆயிரத்து 267 பேர் குணமடைந்துள்ளனர். 244 பேர் உயிரிழந்துள்ளனர்.
2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 46 ஆயிரத்து 57 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.