நாட்டை திறப்பதற்கான திட்டத்தை வகுக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை, ஒக்டோபர் முதலாம் திகதி தளர்த்தி, நாட்டை திறப்பதற்கான திட்டங்களை வகுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

இந்த தகவலை இராணுவத் தளபதி உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவின் பிரகாரம் இதற்கான வேலைத்திட்டம் ஆரம்பமாகியுள்ளது.

இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் பின்னர், அரச ஊழியர்களை சேவைக்கு அழைக்கும் விதம் குறித்த கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.

Related Articles

Latest Articles