நாய், பூனைக்கு பல கோடி மதிப்புள்ள சொத்துகளை உயில் எழுதி வைத்த பெண்!

தான் வளர்த்த நாய், பூனைக்கு பல கோடி சொத்துக்களை பெண்ணொருவர் உயில் எழுதி வைத்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் பெரும் பரபரப்பாக பேசப்படுகின்றது.

சீனாவில் ஷாங்காய் நகரை சேர்ந்தவர் லியூ. மூதாட்டியான இவர் தனக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை தனது 3 குழந்தைகளும் பங்கீடும் வகையில் உயில் எழ எழுதி வைத்தார். ஆனாலும் அந்த பெண் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட போது அவரது குழந்தைகள் 3 பேரும் ஒரு முறை கூட வந்து பார்க்கவில்லை.

இது லியூவுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது. இதனால் ஆவேசம் அடைந்த அவர் தனது உயிலை மாற்றி எழுதி, சொத்துக்கள் அனைத்தையும் தான் வளர்க்கும் நாய் மற்றும் பூனைகள் மீது எழுதி வைத்துள்ளார்.

இதையறிந்த அவரது பிள்ளைகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அவர்கள் நம்பிக்கையான ஒருவரை தேர்ந்தெடுத்து கால்நடை மருத்துவமனை ஆரம்பித்து நாயையும், பூனையையும் நன்கு பராமரிக்க ஒரு விலங்குகள் நல நிறுவனத்தை தொடர்பு கொகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

Related Articles

Latest Articles