நாளை ஹர்த்தால் – ரயில்வே தொழிற்சங்கமும் ஆதரவு

ரயில்வே தொழிற்சங்கங்கள் இன்று (05) நள்ளிரவு 12 மணி முதல் ஒருநாள் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளன.

நாடு முழுவதும் நாளை மறுதினம் நடத்தப்படவுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளப் போவதாக ரயில்வே தொழிற்சங்கங்களின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்
.
நாளை (6) நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு சமகி ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனமும் ஆதரவு வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles