நாவலப்பிட்டிய உச்சிமலை தோட்டத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

நாவலப்பிட்டிய உச்சிமலை தோட்டத்தில் ‘பார்க்கேபல்’ கீழ்பிரிவில் இளைஞர் ஒருவர் இன்று (03) மதியம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நோர்வூட் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய குறித்த இளைஞன், தனது சித்தி வீட்டுக்கு வருகைதந்திருந்தவேளையிலேயே , கடிதம் எழுதிவைத்துவிட்டு இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

காதல் விவகாரம் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனவும், தனது மரணத்துக்கு யார் காரணம் என்பதை குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் எனவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.

Related Articles

Latest Articles