நாவலப்பிட்டிய உச்சிமலை தோட்டத்தில் ‘பார்க்கேபல்’ கீழ்பிரிவில் இளைஞர் ஒருவர் இன்று (03) மதியம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நோர்வூட் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய குறித்த இளைஞன், தனது சித்தி வீட்டுக்கு வருகைதந்திருந்தவேளையிலேயே , கடிதம் எழுதிவைத்துவிட்டு இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
காதல் விவகாரம் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனவும், தனது மரணத்துக்கு யார் காரணம் என்பதை குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் எனவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.