15 வயதுடைய பாடசாலை மாணவியை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று வல்லுறவுக்குட்படுத்திய 28 வயதான நபரொருவரை நுவரெலிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாவலபிட்டியைச் சேர்ந்த பாடசாலை மாணவியை பாடசாலை சீருடையுடன் நுவரெலியாவிலுள்ள ஹோட்டலொன்றுக்கு அழைத்துச்சென்று வல்லுறவுக்குட்படுத்திய நபர், இரு பெண்களை திருமணம் செய்தவரென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபருக்கு அறை வழங்கிய ஹோட்டல் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
