கலஹா, நில்லம்பே நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
நாட்டில் 16 மாவட்டங்களில் கடும் மழையுடன்கூடிய சீரற்ற வானிலை நிலவுகின்றது. நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் சடுதியாக அதிகரித்துவருகின்றது. கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் கடும் மழை பெய்துவருகின்றது.
இதனால் நில்லம்பே நீர்த்தேக்கத்தின் நீர் மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து நீர்த்தேக்கத்தின் இரு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.