புகைப்படக் கலையில் பயிற்சியை முடித்துக்கொண்ட நாற்பது மலையக இளைஞர், யுவதிகளினால் பதிவு செய்யப்பட்ட புகைப்படங்களின் கண்காட்சி ” நிழல் ஓவியம்” என்ற தொனிப் பொருளில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை மு.ப.8.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரை பண்டாரவளை கல்வி வலயத்தில் அமைந்துள்ள ஊவா ஹைலண்ட்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் இக்கண்காட்சி இடம்பெறும் என ஊவா சக்தி பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் சுரேஷ் நடேசன் தெரிவித்தார்.
மலையக இளைஞர், யுவதிகளின் புகைப்பட கலை ஆர்வத்தை தூண்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரண்டாவது கண்காட்சி இதுவாகும்.
இக் கண்காட்சிக்கு மாற்று கொள்கை நிலையம், ஊவா சக்தி பவுண்டேஷன் மற்றும் ஜி.டீ.ஸ்ஸட் என்பவை அனுசரணை வழங்குகின்றன.