நுவரெலியா மாவட்டத்தில் 12 மணி வரையான காலப்பகுதியில் 45 சதவீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி , மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெற்றுவருகின்றது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர். மாலை 4 மணிக்கு வாக்களிப்பு நிறைவடையவுள்ளது.