நுவரெலியாவில் நேற்று மாத்திரம் 11 பேருக்கு கொரோனா தொற்று!

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 11 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை 493 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 80 வீதமானோர் குணமடைந்துள்ளனர்.

அதேவேளை கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் கண்டி மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 551 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 75 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles