நுவரெலியாவில் பெண் வன்கொடுமை எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

உலக பெண்கள் வன்கொடுமை எதிர்ப்பு தினத்தையொட்டி வியாழக்கிழமை (26) பெண் வன் கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றினை நுவரெலியா ஐக்கிய இலங்கை நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் பெண் ஊழியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது

குறித்த ஊர்வலம் நுவரெலியா பிரதான தாபாலகத்திற்கு அருகில் ஆரம்பமாகி எலிசபெத் வீதி லோசன் வீதி,கண்டி வீதி, பழையகடை வீதி வழியாக சென்று பம்பரகலை பகுதியில் நிறைவடைந்தது.

குறித்த ஊர்வலத்தில் 150 க்கும் மேற்பட்டோர் இணைந்து இந்த நாட்டில் பெண்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.

பெண்களுக்கு அரசியல் செவதற்கான சகல உரிமைகளும் பெற்றுக்கொடுக்க வேண்டும். பெண்களை சுமுக முறையில் அரசியலில் ஈடுபட வழி செய்து கொடுக்கப்பட வேண்டும். பெண்கள் தலைமைத்துவம் உறுவாக்க வேண்டும். பெண்களின் குரல்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

உட்பட கோரிக்கைகளை அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றமை குறிப்பிடத்தக்கது .

செ.திவாகரன்

Related Articles

Latest Articles