நுவரெலியாவில் மேலும் 119 பேருக்கு கொரோனா – இதுவரை 4,979 பேர் பாதிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 119 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2020 ஒக்டோபர் 4 ஆம் திகதியிலிருந்து இதுவரை கொரோனாவால் நுவரெலியா மாவட்டத்தில் 4 ஆயிரத்து 979 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கண்டி மாவட்டத்தில் 99 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் 119 பேருக்கும், பதுளை மாவட்டத்தில் 35 பேருக்கும் நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles